×

சுசீந்திரம் மக்கள்மார் சந்திப்புக்காக பயணம் பார்வதிபுரம் மேம்பாலத்தில் சென்ற வேளிமலை முருகனின் வெள்ளிக்குதிரை வாகனம்

நாகர்கோவில், டிச.16: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழாவில் 3ம் நாளான இன்று (16ம் தேதி) இரவு 10.30 மணிக்கு சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமாரசாமி ஆகியோர் தங்கள் தாய் தந்தையான தாணுமாலய சுவாமி, அம்பாளை காணும் மக்கள் மார் சந்திப்பு நடைபெறுகிறது.இதற்காக குமார கோவில் முருகன் பல்லக்கிலும், அவரது வெள்ளிகுதிரை வாகனமும் நேற்று குமாரகோவில் இருந்து தனித்தனியே சுசீந்திரம் நோக்கி புறப்பட்டது.  வரும் வழியில் பார்வதிபுரம் பாலம் நேற்று மக்கள் பார்வைக்கு திறந்து விட தயார் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து வெள்ளிக்குதிரை வாகனம் பாலத்தின் மீது சென்றது. பல்லக்கு கீழ் பகுதி வழியாக எடுத்து செல்லப்பட்டது.  

பின்னர் கட்டையன்விளை பகுதியில் உள்ள மாவுமில்லில் குதிரை வாகனம் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அங்கு குமாரகோயில் முருகனும் பல்லக்கில் கொண்டுவரப்பட்டு மாலையில் குதிரை வாகனத்தில் வேளிமலை குமாரசுவாமி அலங்காரத்துடன் அமர்ந்து நாகர்கோவில் பகுதியில் உள்ள கோயில்கள் மற்றும் பல்வேறு தெருக்களில் வலம் வரும் நிகழ்வுகள் நடைபெற்றது. இரவு வெட்டூர்ணிமடம் வடசேரி பயோனியர் தெருவில் விநாயகர் கோயில் தங்கலுக்கு பின்னர் இன்று (16ம் தேதி) காலை சிறப்பு அபிஷேகத்திற்கு பின்னர் சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுசீந்திரம் புறப்பட்டு செல்கிறார்.

Tags : Velimalai Murugan ,
× RELATED வேண்டியதை அருள்வார் வேளிமலை முருகன்