×

கிருஷ்ணராயபுரம் பகுதி 3 ஊராட்சிகளை தோகைமலை ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

கடவூர், டிச.5: கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கிணம் ஊராட்சிகளை தோகைமலை ஊராட்சியுடன் இணைக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஊராட்சியில் உள்ள கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கிணம் இந்த 3 ஊராட்சிகள் தாலுகாவிற்கு கடவூர் வரவேண்டும். யூனியன் அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் கிருஷ்ணராயபுரம் செல்ல வேண்டும். அங்கு சென்று வர சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் இந்த பகுதி மக்கள் வீடுகள் கட்ட பில் பெற வேண்டும் என்றால் கிருஷ்ணராயபுரம்தான் செல்ல வேண்டும். மேலும் இந்த 3 ஊராட்சிகளிலும்  20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

எனவே இந்த 3 ஊராட்சிகளையும் 10 கி.மீ. தொலைவில் உள்ள தோகைமலை ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்துக்கொண்டால் இந்த பகுதி மக்கள் சிரமமின்றி யூனியன் பணிகளை பார்த்துக் கொள்வார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த 3 ஊராட்சிகளையும் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Village people ,area ,Thodigamalai Union ,
× RELATED மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்...