×

வாலாஜா அருகே காதலிக்க மறுத்த 2 குழந்தைகளின் தாயை மிரட்டியவர் கைது

வாலாஜா, டிச.5: காதலிக்க மறுத்த 2 குழந்தைகளின் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் வாலாஜா ரபீக் நகரை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது 26 வயது மனைவி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதால் அவரது மனைவி குழந்தைகளுடன் வாலாஜாவில் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் தம்பி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்நிலையில், தம்பியின் நண்பரான முத்தையா முதலி தெருவை சேர்ந்த பெருமாள்(24). என்பவர், இளம்பெண்ணுக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தன்னை காதலிக்கும்படி அந்த பெண்ணிடம் பெருமாள் வற்புறுத்தி வந்தார். ஆனால் இளம்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் பெண்ணின் வீட்டிற்கு சென்ற பெருமாள், காதலிக்கும்படி மீண்டும் தகராறு செய்தார். அப்போது இளம்பெண் எச்சரித்ததால் அவரை பெருமாள், தாக்கியதாகவும், குழந்தைகளை கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், வாலாஜா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பெருமாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : infants ,Valaja ,
× RELATED சென்னைக்கு கார்களில் கடத்திய 3 டன் குட்கா பறிமுதல்; 4 வாலிபர்கள் கைது