×

தைப்பூசத்தை முன்னிட்டு நாளை முதல் 21ம் தேதி வரை மேல்மருவத்தூரில் ரயில்கள் நின்று செல்லும்

சென்னை, டிச. 4: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு: எழும்பூரில் - திருச்சி ராக்போர்ட் விரைவு ரயில்(4-20ம் தேதி வரை) இரவு 1.52 மணிக்கு நின்று செல்லும். எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில்(5-21ம் தேதி வரை) மதியம் 3.03 மணிக்கு, எழும்பூர்-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ்(5-21ம் தேதி வரை) இரவு 11.04 மணிக்கு, எழும்பூர்-செங்கோட்டை பொதிகை விரைவு ரயில்(5-21ம் தேதி வரை) இரவு 10.25 மணிக்கு, எழும்பூர் - நாகர்கோவில் விரைவு ரயில்(6-17ம் தேதி வரை) இரவு 8.05 மணிக்கு, எழும்பூர்-மன்னார்குடி மன்னை விரைவு ரயில் (5-21 ம் தேதி வரை) இரவு 10.46 மணிக்கும், எழும்பூர்-மதுரை எக்ஸ்பிரஸ்(7-20ம் தேதி வரை) நள்ளிரவு 1.15 மணிக்கும், புவனேஸ்வர்- ராமேஸ்வரம் விரைவு ரயில் (7-18ம் தேதி வரை) இரவு 10.09 மணிக்கும், தாம்பரம்- திருநெல்வேலி அந்தியோதயா எக்ஸ்பிரஸ்(5-21ம் தேதி வரை) நள்ளிரவு 1.30 மணிக்கு மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இதேபோல், திருச்சி-எழும்பூர் விரைவு ரயில்(4-20ம் தேதி வரை) நள்ளிரவு 2.33 மணிக்கு, மதுரை-எழும்பூர் வைகை விரைவு ரயில் (5-21ம் தேதி வரை) மதியம் 12.39 மணிக்கு, மதுரை-எழும்பூர் பாண்டியன் விரைவு ரயில்(4-20ம் தேதி வரை) இரவு 2.54 மணிக்கு, செங்கோட்டை- எழும்பூர் பொதிகை விரைவு ரயில்(4-20ம் தேதி வரை) இரவு 3.52 மணிக்கு, நாகர்கோவில்-எழும்பூர் விரைவு ரயில்(7-18ம் தேதி வரை) இரவு 3.25 மணிக்கும், மதுரை-எழும்பூர் விரைவு ரயில்(6-19ம் தேதி வரை) அதிகாலை 5.01 மணிக்கும், மன்னார்குடி-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ்(4-20ம் தேதி வரை) அதிகாலை 6.40 மணிக்கும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

Tags : Perumbavoor ,
× RELATED மோகன்லால் இயக்கி நடித்த பரோஸ்:செப்டம்பர் 12ம் தேதி ரிலீஸ்