×

காரிமங்கலம் அருகே விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி

காரிமங்கலம், நவ.27: காரிமங்கலம் அருகே பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. காரிமங்கலம் ஒன்றியம் காமலாபுரத்தில், வேளாண்மைத்துறை சார்பில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில், பண்ணைப்பள்ளி முகாம் நிலம் தயாரிப்பு முதல் அறுவடை செய்யும் வரை கடைபிடிக்க வேண்டிய நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு வேளாண்மை துறையின் சார்பில், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் உழவன் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்தும் எடுத்து கூறப்பட்டது. முகாமில், துணை வேளாண்மை அலுவலர் சம்பத்,  வேளாண்மை உதவி அலுவலர்கள் பெருமாள் செல்வம், அட்மா திட்ட அலுவலர்கள் இளவரசி பெரியசாமி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Calimangalam ,
× RELATED காரிமங்கலம் அருகே கூட்டுறவு தேர்தலில் 6 இயக்குநர்கள் தேர்வு