×

கஜா புயல் நிவாரண நிதிக்கு உண்டியல் பணம் வழங்கிய சிறுமி

கரூர், நவ. 27: கரூர்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில்,  2ம் வகுப்பு பயிலும் மாணவ, தனது சேமிப்பு பணத்தை, கஜா புயல் பாதித்த  மக்களுக்காக மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட  அங்கண்ணன் சந்து பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. விவசாயி. இவரது மனைவி  புவனேஷ்வரி. இவர்களின் மகள் மதிவதனி. இந்த பகுதியில் உள்ள தனியார்  பள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வருகிறார். கஜா புயலால் பலர்  பாதிக்கப்பட்டு, நிதியுதவிகள் வழங்கி வருவது குறித்து கேட்டறிந்த இந்த  மாணவி, கடந்த ஜனவரி மாதம் முதல் தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த  பணத்தை தான் வழங்க உள்ளதாக பெற்றோர்களிடம் தெரிவித்தார். இதனடிப்படையில்,  நேற்று சிறுமி தாய் புவனேஸ்வரியுடன் வந்து, மாவட்ட கலெக்டரை சந்தித்து,  கடந்த 11 மாதங்களாக தான் சேமித்து வைத்த பணத்தை கஜா புயல் நிவாரண நிதியாக  வழங்கினார். நிதியை பெற்றுக் கொண்ட கலெக்டர் அன்பழகன் சிறுமியை  பாராட்டினார். சிறுமி தான் சேமித்த பணத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்ததை கேள்விப்பட்டு அங்கிருந்த மக்கள் வழங்கிய நிதியையும் சேர்த்து  மதிவதினி கலெக்டரிடம் வழங்கினார்.

Tags : storm ,
× RELATED மும்பையை சூறையாடிய புழுதிப்புயல்...