×

புளுதியூர் சந்தையில் ₹24லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர், நவ.22: அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூர் சந்தையில் ₹24லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது.
அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன் கிழமையில் சந்தை நடைபெறுகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில், வாரந்தோறும் சுமார் 180க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது. இங்கு நடைபெறும் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வாங்க வியாபாரிகள் இங்கு வருகின்றனர். நேற்று நடைபெற்ற சந்தையில், மாடு ₹2250 முதல் ₹47500 வரையும், ஆடு ₹3500 முதல் ₹6500 வரையும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் ₹24லட்சத்திற்கு மாடு, ஆடுகள் விற்பனையானது. வரும் மழை காலத்தை கருத்தில் கொண்டு, மாடுகள் அதிக அளவில் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

Tags : Puliyathi ,
× RELATED புளுதியூர் சந்தையில் ₹24 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை