×

5 கோடியில் நாகர்கோவில் நகராட்சி அலுவலக கட்டுமான பணி தொடக்கம்

நாகர்கோவில், நவ. 21:  நாகர்கோவில் நகராட்சி அலுவலகம் புதிதாக கட்ட தமிழக அரசு உத்தரவிட்டு அதற்காக 5 கோடியை ஒதுக்கியது. புதிய அலுவலகம் நாகர்கோவில் கலைவாணர் கலையரங்கம் இருந்த இடத்தில் அமைகிறது. நாகர்கோவில் நகராட்சி அலுவலக கட்டிடம் மொத்தம் 20 ஆயிரம் சதுர அடியில் அமைகிறது. சாலை மட்டத்தின் கீழ் பகுதியில் கார் பார்க்கிங் அமைக்கப்படுகிறது. சாலை மட்டத்தில் நகராட்சி அலுவலகத்தின் தரைதளம் அமைகிறது. மொத்தம் 4 மாடி கொண்ட கட்டிடத்தில் நகராட்சி அனைத்து அலுவலகமும் இடம்பெறுகிறது. தற்போது கட்டிடத்திற்கான அஸ்திவாரம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. பணிகளை ஒரு வருடத்தில் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : office ,Nagarcoil ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...