×

எலிபேஸ்ட் சாப்பிட்டு பட்டதாரி பெண் சாவு

திருக்கோவிலூர். நவ. 15: திருக்கோவிலூர் அடுத்த கொடுக்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகள் சித்ரா(25). எம்எஸ்சி பயோ கெமிஸ்ட்ரி படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில தினங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று எலிபேஸ்ட்டை எடுத்து சாப்பிட்டுள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் அவர் பணிபுரிந்த தனியார் மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ellipsee ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை