×

முத்துப்பேட்டையில் தீபாவளியன்று பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு

முத்துப்பேட்டை, நவ.8: முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கலாம் கனவு இயக்கம் சார்பில் நேற்று முன்தினம் தீபாவளியன்று பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.
இயக்கத்தின் ஆலோசர்கள் டாக்டர் சையத் அபுதாகிர், சமூக ஆர்வலர் முகமது மாலிக், மெட்ரோ மாலிக், ஆசிரியர் செல்வசிதம்பரம், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்து பாராட்டி பேசினர். அப்போது தீபாவளியன்று குடும்பத்தைவிட்டு வந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கணபதி, உஷாதேவி மற்றும் காவலர்கள் பாராட்டி இனிப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதில் இயக்கத்தின் செயலாளர் ஹாஜா, பொருளாளர் கிஷோர், துணைத் தலைவர் பாலாஜி, துணைச் செயலாளர் விவேக், திட்ட இயக்குநர் பைஸ், மக்கள் நலஆர்வலர் அயூப்கான்  மற்றும் காவலர்கள் உட்பட  பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Deepavali ,
× RELATED தீபாவளி ஸ்பெஷல் கிராமத்து மட்டன் வறுவல்!