×

புதுமண தம்பதிக்கு சிறப்பு கருத்தரங்கம்

உளுந்தூர்பேட்டை, நவ. 1: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் புதுமண தம்பதியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நந்திதா தலைமையில் நடைபெற்றது. பாலூட்டும் தாய்மார்களுக்கான பராமரிப்பு முறைகள், பச்சிளம் மற்றும் குழந்தைகளுக்கு உணவூட்டும் முறைகள், தாய்ப்பாலின் நன்மைகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு முறைகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. இதில் திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 30 புதுமண திருமண தம்பதி
யினர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Tags : seminar ,
× RELATED சாயர்புரம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்