×

மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.40.68 லட்சம்

பொள்ளாச்சி, அக்.26: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ.40.68 லட்சத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியிடங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.
இங்கு, வெள்ளி, செவ்வாய் மற்றும் அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும்போது, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
மாசாணியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் எண்ணப்படுகிறது. இதில், இந்த மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில், கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
கோயில் வளாகத்தில் உள்ள மொத்தம் 16 பொது உண்டியல் மற்றும் 9 தட்டுக்காணிக்கை உண்டியல்களில் உள்ள காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், பொது உண்டியல் மூலம் ரூ.30 லட்சத்து 72ஆயிரத்து 974ம், தட்டு காணிக்கை உண்டியலில் ரூ.9 லட்சத்து 95 ஆயிரம் என மொத்தம் ரூ.40 லட்சத்து 68 ஆயிரத்து 28 இருந்தது. மேலும் தங்கம் 244 கிராம், வெள்ளி 953 கிராம் இருந்தது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags : Masanniyamman ,
× RELATED அமாவாசையை முன்னிட்டு மாசாணியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு