×

கோவை வர்த்தக மையத்தில் ரூ.3.50 கோடிக்கு தேயிலை விற்பனை

கோவை, அக்.26:கோவை வர்த்தக மையத்தில் இந்த வாரம் ரூ.3.50 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த வாரத்தை விட ரூ.63 லட்சம் அதிகமாகும்.கோவை தேயிலை வர்த்தக மையத்தில் வாரம்தோறும் தேயிலைத்தூள் விற்பனை ஆன்லைன் ஏலம் மூலம் நடக்கிறது. அதன்படி இந்த வாரம் நடந்த விற்பனைக்கு கோவை, நீலகிரியை சேர்ந்த வர்த்தகர்களின் தேயிலைத்தூள் உள்ளூர் ரகம் (டஸ்ட்) 3.15 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில்  2.27 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ ரூ.111.23. விற்பனை மதிப்பு ரூ.2.53 கோடி.
ஏற்றுமதி ரகம்(லீப்) 1.30 லட்சம் கிலோ  விற்பனைக்கு வந்தது. இதில் 95 ஆயிரம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ ரூ.101.26. விற்பனை மதிப்பு ரூ.97  லட்சம். கடந்த வார விற்பனையோடு  ஒப்பிடுகையில், உள்ளூர் ரகம் கிலோவுக்கு ரூ.2.12 அதிகரித்துள்ளது. ஏற்றுமதி ரகம்  கிலோவிற்கு ரூ.2.09 குறைந்துள்ளது. மொத்தத்தில் உள்ளூர் மற்றும்  ஏற்றுமதி ரக தேயிலைத்தூள் ரூ.3.50 கோடிக்கு விற்றுள்ளது. இது கடந்த வாரத்தை  விட ரூ.63 லட்சம் அதிகமாகும். வரத்து இரண்டு ரகமும் சேர்த்து கடந்wத வாரத்தை விட 45 ஆயிரம் கிலோ அதிகரித்துள்ளது. விற்பனையும் கடந்த வாரத்தை விட 55 ஆயிரம் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் தேயிலைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால், விற்பனை அதிகரித்துள்ளதாக, வர்த்தகர்கள் கூறினர்.

Tags : Coimbatore Business Center ,
× RELATED கோவை வர்த்தக மையத்தில் ரூ.3.35 கோடிக்கு தேயிலை விற்பனை