×

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில ஆசாமிகள் 2 பேருக்கு சிறை

சேலம், அக்.26:  சேலம் அழகாபுரம் பகுதியில் நடந்த சென்ற 2 பெண்களிடம், 2014ம் ஆண்டு நகை பறித்த வழக்கில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அர்ஜூன்அமர்குமார் ஷர்மா(30), பஞ்சாப்பை சேர்ந்த ரவிக்குமார்(31) ஆகியோரை அழகாபுரம் போலீசார் கைது செய்தனர். இவர்களின் கூட்டாளிகள் 2 பேர் தலைமறைவாகி விட்டனர். தொடர் விசாரணையில், மாநகரில் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் இந்த கும்பல் நகை பறித்தது தெரியவந்தது.

இவர்கள் மீதான வழக்கு, சேலம் 5வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்ைக விசாரித்த நீதித்துறை நடுவர் கணேசன், வழிப்பறி ஆசாமிகளான அர்ஜூன் அமர்குமார் ஷர்மா(30), ரவிக்குமார் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இவர்கள் மீது இன்னும் வழக்குகள் இருப்பதால், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : prisoners ,Assamese ,series ,
× RELATED சிறைக்குள் வெள்ளம் 100 கைதிகள் தப்பி ஓட்டம்