×

செலவுக்கு பணம் தர மறுத்தவரை தாக்கியவர் கைது

சின்னசேலம், அக். 26:சின்னசேலம் அருகே தகரை காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சடையன் மகன் கண்ணன்(35), விவசாயி. இவருக்கு, அவரது மாமன் முறையான சடையன் என்பவர் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார். கண்ணனுக்கு இவர் செய்த உதவியை வைத்து அடிக்கடி செAலவுக்கு சடையன் பணம் வாங்கி வந்துள்ளார்.
அதேபோல சம்பவத்தன்று சடையன், கண்ணனிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு கண்ணன் என்னிடம் தற்போது பணம் இல்லை என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சடையன், அவரை அசிங்கமாக திட்டி தாக்கி கடித்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த கண்ணன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கண்ணன் அளித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சடையனை கைது செய்தனர்.

Tags : attacker ,
× RELATED ராம் பொதினேனி ஜோடியாக ஸ்ரீ லீலா நடிக்கும் ‘ஸ்கந்தா’