×

ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி

சின்னசேலம், அக். 26: கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே கல்பூண்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற மணிகண்டன்(50). இவர் சென்னை பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் தன் அண்ணனுக்கு சொந்தமான ஆட்டோவை எடுத்துக்கொண்டு வீ.கூட்ரோடு பகுதியில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு குடிபோதையில் ஆட்டோவை சேலம் மார்க்கத்தில் இருந்து வேப்பூர் மார்க்கமாக ஓட்டி சென்றுள்ளார். கிருஷ்ணாபுரம் பிரிவு ரோடு அருகே சென்றபோது ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த மணியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி கலா அளித்த புகாரின்பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை