×

கம்யூனிஸ்ட் அலுவலகம் முத்தரசன் திறந்து வைத்தார்

ரிஷிவந்தியம், அக். 26:    ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் திறப்பு விழா நடந்தது. வட்ட செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். வட்டதுணை செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு கொடியேற்றினார். பின்னர் பகண்டைகூட்ரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கடசி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் 18 எம்எல்ஏக்கள் தீரப்பு நீண்ட இழுபறிக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது. முல்லை பெரியாறு அணை பிரச்னை குறித்தும், மாநில அரசு மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுகிறது என குற்றம் சாட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர்  சவுரிராஜன், மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி, நிர்வாகிகள் அப்பாவு, சின்னசாமி, வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Communist Office ,Muthuraman ,
× RELATED விபத்தில் சிக்கிய மின் ஊழியர் பலி