×

திண்டிவனம் போக்குவரத்து காவல்நிலையத்தில் எஸ்பி ஆய்வு

திண்டிவனம், அக். 23: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் போக்குவரத்து காவல்நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை போக்குவரத்து காவல்நிலையத்துக்கு வந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்  திடீரென வந்தார். அப்போது காவல்நிலையத்தில் இருந்த காவலர்களின் வருகைப்பதிவேடு, பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்து போலீசாரிடம் விவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது போக்குவரத்து காவல்நிலைய ஆய்வாளர் ஷியாம் பெனாட், உதவி ஆய்வாளர்கள் தட்சணாமூர்த்தி, கல்யாணராமன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.

Tags : SSP ,inspection ,traffic police station ,Tindivanam ,
× RELATED தனிப்பிரிவு காவலரின் குழந்தைகளுக்கு தங்கம்