×

புதுச்சத்திரம் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து 16 பேர் படுகாயம்

புவனகிரி, அக். 23:  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் ஆம்னி பஸ் ஒன்று சென்றது. இந்த பஸ் புதுச்சத்திரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த திருவாரூர் அருகே உள்ள மங்களம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன்(43), இவரது மனைவி கலைச்செல்வி(39), திருத்துறைப்பூண்டி ஹரிகரன்(27), கோவை விக்னேஷ்(34), இவரது மனைவி ஐஸ்வர்யா(27) உள்ளிட்ட 16 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,Omni ,newborn ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து