×

நல்லம்பள்ளியில் தாலுகா அலுவலக கட்டுமான பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

தர்மபுரி, அக்.11: நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தின் புதிய கட்டுமான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட 5 தாலுகாக்கள் இருந்தன. கடந்த 2 ஆண்டுக்கு முன் 6வது தாலுகாவாக தர்மபுரி தாலுகாவில் இருந்த நல்லம்பள்ளி, இண்டூர், தொப்பூர் ஆகிய பகுதிகளை பிரித்து நல்லம்பள்ளி தாலுகா உருவாக்கப்பட்டது. இதையடுத்து நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் பிடிஓ அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நல்லம்பள்ளி, தொப்பூர், இலளிகம், நார்த்தம்பட்டி,

ஜருகு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் வருவாய்துறை சம்பந்தமான சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். நல்லம்பள்ளி தாலுகா அலுவலக கட்டிடத்திற்கான பணி ஓராண்டுக்கு முன் ரூ2.65 கோடியில் தொடங்கியது. ஆனால் இன்னும் பணிகள் முடிவடைந்தபாடில்லை. தற்போது தாலுகா அலுவலகமானது, பிடிஓ அலுவலகத்தில் இடநெருக்கடியில் நடந்து வருகிறது. எனவே நல்லம்பள்ளி தாலுகா கட்டிடத்தின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Taluk ,office building ,
× RELATED பெருந்துறையில் கிராம நிர்வாக அலுவலர்...