×

பெருந்துறையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு

 

ஈரோடு, மே 8: ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவிற்கு உட்பட்ட காஞ்சிக்கோயில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நேற்று கலெக்டா் ராஜகோபால் சுன்கரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற மனுக்கள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட மனுக்கள், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்த பதிவேடுகள்,அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மனுக்களின் நிலை குறித்து விஏஓவிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கோப்புகளை ஆய்வு செய்தார். இதேபோல், பெருந்துறை தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அளித்த மனுக்களின் நிலை குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விஏஓவிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

The post பெருந்துறையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Perundurai ,Erode ,Rajagopal Sunkara ,Kanchikoil ,Perundurai taluk ,
× RELATED திட்டப்பணியால் போக்குவரத்து பாதிப்பு