×

மாணவர்கள் மீது தடியடி போலீசாரை கண்டித்து டிஒய்எப்ஐ ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், அக். 11:  நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. தடியடியை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அகில இந்திய மாதர் சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எபிலைசியஸ் ஜோயல், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ரகுபதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாதர் சங்க மாநில நிர்வாகி உஷா, வாலிபர் சங்க மாநில துணை தலைவர் ெரஜீஸ்குமார், நிர்வாகிகள் அன்புசெல்வி, ஜோஸ் மனோகரன், காட்சே, லெட்சுமி, ஜெசிந்தா, ரதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DYFI ,
× RELATED மத்திகிரியில் டிஒய்எப்ஐ ஆர்ப்பாட்டம்