டெல்லி: தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதா மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சம்மனுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததால் கவிதா நாளை மீண்டும் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.