பாலசோர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் சந்திப்பூரில் இயங்கி வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் 57 வயதான நபர் பணிபுரிந்து வந்தார். இவர் சந்திப்பூர் நிறுவனத்தில் ஏவுகணை சோதனைகள் குறித்த முக்கிய தகவல்களை பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த உளவாளியுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சந்திப்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த அதிகாரியை போலீசார் நேற்று கைது செய்தனர். அந்த நபர் எந்தெந்த தகவல்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்தார் என விசாரணை நடத்தப்படுகிறது.