×

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஷீபா வாசு காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: சென்னை மாநகராட்சியின் 122வது வார்டு கவுன்சிலர் திடீரென்று நேற்று காலை மரணமடைந்தார். சென்னை மாநகராட்சியின் 122 வது வார்டு திமுக கவுன்சிலர் ஷீபா வாசு (75). முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அலுவலக துணை இயக்குநர் பிரபுகுமாரின் தாயார். நேற்று அதிகாலை உடல் நலக் குறைவால் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தேனாம்பேட்டை செனடாப் சாலையில்  உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் ஷீபா வாசுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் நேற்று மாலை 5 மணிக்கு ஒய்எம்சிஏ நந்தனம் மயான மைதானத்தில் இறுதிச் சடங்கு நடைப்பெறுகிறது.

ஷீபாவாசுவின் கணவர் வாசு, 2015ல் மரணமடைந்தார். இவருக்கு ஹென்றி துரை, அருண், பிரபுகுமார் ஆகிய மகன்களும், சாந்தி என்ற மகளும் உள்ளனர். ஷிபா வாசு மறைவு குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தி.சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஷீபா வாசு 16ம் தேதி அதிகாலை உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்ற செய்திகேட்டு மிகவும் வருந்தினேன். மக்கள் பணியாளராகவும், கழகத்தின் செயல்வீரராகவும் இருந்து சிறப்புறப் பணியாற்றி வந்த அவரது மறைவு பெரிதும் வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும், 122 வது வார்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tags : Chennai Corporation ,Councilor ,Sheeba Vasu ,Chief Minister ,M.K.Stal , Chennai Corporation Councilor Sheeba Vasu passed away: Chief Minister M.K.Stal pays tribute in person
× RELATED சென்னை மாநகராட்சியில் இணைய வழியில்...