குமரி: குமரி மாவட்டத்தில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி கடலில் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
