×

சென்னை பெரம்பூர் பகுதிகளில் 6 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: இழப்பீட்டுத் தொகை ரூ.8.18 லட்சம் வசூல்

சென்னை: பெரம்பூர் பகுதியில் 6 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து இழப்பீட்டுத் தொகையாக ரூ.8.18 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை/மையம், சென்னை/வடக்கு, சென்னை/தெற்கு, சென்னை/மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் சென்னை/வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெரம்பூர் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 6 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ரூ.7,81,814/- (ரூபாய் ஏழு லட்சத்து எண்பத்தி ஒறாயிரத்து எண்ணூற்று பதிநான்கு மட்டும்) இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.36,500/- செலுத்தியதால் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர்/அமலாக்கம்/சென்னை கைபேசி 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Tags : Chennai Perampur , 6 Detection, compensation, collection of power thefts
× RELATED பூந்தமல்லி அருகே விபத்து பேருந்து...