×

பூந்தமல்லி அருகே விபத்து பேருந்து மோதி கல்லூரி மாணவி பலி: டிரைவருக்கு வலைவீச்சு

பூந்தமல்லி, ஜன.3: பூந்தமல்லி அருகே, தனியார் கம்பெனி பேருந்து மோதி கல்லூரி மாணவி பலியானார். சென்னை பெரம்பூர், எம்.எஸ்.எம். தெருவைச் சேர்ந்தவர் தேஜா(22), தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். மேலும் பெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பயிற்சி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை வேலை யை முடி த்துவிட்டு தனது டூ வீலரில் தேஜா வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். பூந்தமல்லி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் அருகே சென்றபோது, பின்னால் தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றி வந்த பேருந்து, தேஜாயின் டூ வீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தேஜாபடுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேஜாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

The post பூந்தமல்லி அருகே விபத்து பேருந்து மோதி கல்லூரி மாணவி பலி: டிரைவருக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,CHENNAI PERAMPUR, M.S.M. ,Deja ,Perumbudur ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ