×

தண்டையார்பேட்டையில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை: 5 பேருக்கு வலை

தண்டையார்பேட்டை, ஏப்.28: தண்டையார்பேட்டையில் வீடு புகுந்து ரவுடியை சரமாரி வெட்டி கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை சிவாஜி நகரை சேர்ந்தவர் லொட்டை (எ) ஆனந்த் (22) ஆட்டோ டிரைவர். இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு உட்பட 15க்கும் மேற்பட வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ரோஜா (19) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர், நேற்று தனது வீட்டில் இருந்த போது, தனது மனைவியிடம் முட்டை தோசை கேட்டதால், அவரது மனைவி முட்டை வாங்க கடைக்கு சென்றார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், வீட்டின் உள்ளே நுழைந்து, ஆனந்தை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியது. கடைக்கு சென்று, வீட்டுக்கு வந்த ரோஜா ரத்த வெள்ளத்தில் ஆனந்த் கிடப்பதை பார்த்து கத்தினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஆனந்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே ஆனந்த் உயிரிழந்தார். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் ஆனந்தின் சகோதரர் சுரேஷ் என்பவரை தண்டையார்பேட்டை சிவாஜி நகரை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் சரமாரி வெட்டியுள்ளனர். இதற்கு பழி தீர்க்க ஆனந்த் திட்டம் தீட்டி வந்தது கார்த்திக்கு தெரிய வந்ததால், ஆனந்தை வெட்டி கொலை செய்துள்ளனர் என்று தெரிய வந்தது.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கார்த்திக் (எ) பொங்கல் (19), சதீஷ்குமார் (எ) குசுமி (23), சந்தோஷ் (எ) விஷம் (21), அருண்குமார் (எ) பொங்கல் அருண் (26) தனசேகர் (எ) தனுஷ் (19) மற்றும் பரத் ஆகியோரை போலீசார ்தேடி வருகிறார்கள். இந்நிலையில் ஆனந்த் மற்றும் கார்த்திக் இடையே முன்விரோத காரணமாக சண்டை உள்ளதாகவும் நுண்ணறிவு போலீசாருக்கு தெரிந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு தான் காசிமேடு பகுதியில் பட்டபகலில் இதேபோன்று ஒரு கொடுர கொலை அரங்கேறிய நிலையில், தற்போது வீடு புகுந்து ஒருவரை வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தண்டையார்பேட்டையில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை: 5 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpeti ,Thandaiyarpet ,Lottai (A) Anand ,22 ,Shivaji Nagar ,Robber ,
× RELATED மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே...