×

அம்பத்தூர் பகுதியில் தொடர் கொள்ளை சிறுவன் உட்பட 8 பேர் கைது 10 சவரன், பைக்குகள் பறிமுதல்

அம்பத்தூர்:  அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில்  தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 சவரன் நகைகள், 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். அம்பத்தூர், கள்ளிகுப்பம், முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் பிருந்தா (34). கடந்த நவம்பர் மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளைபோனது. இதுகுறித்த புகாரின் பேரில், அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அலமேலு வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

அதே மாதத்தில் அம்பத்தூர் மற்றும் ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல கடைகள் மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கபட்டதாக புகார்கள் வந்தன. இதையடுத்து 8 பேர் கொண்ட தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.  இந்நிலையில், தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் ஆவடி பகுதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி நேற்று முன்தினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஒரு வீட்டில் பதுங்கியிருந்த புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நரேந்திரன் (19), சந்தோஷ்குமார் (22) ஆகியோரை கைது செய்தனர்.  சகோதரர்களான இவர்கள் தங்களது கூட்டாளிகளான கார்த்திக் (20), சுகுனேஷ் (20), சூர்யா (19), பிட்டா அஷ்வின் (19) மற்றும் 2 சிறுவர்களுடன் சேர்ந்து அம்பத்தூர், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களையும் கைது செய்தனர்.  

கைது செய்யப்பட்ட 2 சிறுவர்களை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். மற்றம் 6 பேரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 10 சவரன் நகை, 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Tags : Ambathur , Ambattur, Serial Robbery, 8 Arrested, 10 Savaran, Bikes Seized
× RELATED சென்னை அம்பத்தூரில் ஏசியில் ஏற்பட்ட...