×

திருவாரூரில் பொதக்குடி தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு விழா: அனைத்து மதத்தினரும் சந்தனம் பூசும் நிகழ்ச்சியில் பங்கேற்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் பொதக்குடி தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் 25-ம் தேதி கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நடைபெற்ற சந்தனக்கூடு விழாவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்தனக்கூடு வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

இதில் பொதக்குடி, கூத்தாநல்லூர், திருவாரூர், மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளாமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற சந்தனக்கூடு தேர் பின்னர் தர்காவை சென்றடைந்தது. இதையடுத்து இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் பங்கேற்று சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


Tags : Pothakudi Dharga ,Tiruvarur , Tiruvarur, Pothakudi, Dargah, Chandanakudu, Festival
× RELATED கூட்டுறவு மேலாண்மை முழுநேர...