சென்னை: சென்னையில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளி சதீஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். கடந்த 13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யபிரியாவை ரயில் முன் தள்ளி கொலை செய்தார் சதீஷ்.