×

491 தங்கும் விடுதிகளில் சோதனை எப்ஆர்எஸ் கேமரா மூலம் 2,236 பேரின் முகங்கள் ஆய்வு

சென்னை:  சென்னையில் குற்றங்களை தடுக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போலீசார் மாநகரம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை காவல் எல்லையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 491 லாட்ஜ்கள், மேன்ஷன்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கி இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பிறகு, இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான குழு சென்னையின் முக்கிய சந்திப்புகளில் திடீர் வாகன சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பைக், ஆட்டோ, கார்கள் என மொத்தம் 3,978 வாகனங்கள் மற்றும் அவற்றில் பயணித்த நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பழைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் 2,236 நபர்களிடம் எப்ஆர்எஸ் என்ற முக அடையாளம் கண்டுபிடிக்கும் கேமரா மூலம் ஒப்பிட்டு பார்த்து சில குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய. உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 96 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : 491 hostels checked, FRS camera, face scan
× RELATED இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு