சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் பற்றி வழக்கு தொடர்ந்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் நீதிபதி என்.சதீஷ்குமார் கேள்வி எழுப்பினார். போராட்டத்திற்கு அனுமதி அளித்தது யார்? வன்முறையில் ஈடுபட்டது யார்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டு வாகனங்கள் தீ வைக்கப்பட்டதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.