சென்னை: அதிமுக தலைமையகத்தில் நடந்த வன்முறையின் போது ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டை சம்மந்தப்பட்டவர்களிடம் வசூலிப்போம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதை தடுக்கவே அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஜூலை 11ம் தேதி நடந்த வன்முறை தொடர்பான காட்சிகளையும் காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.