சென்னை: பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. வங்கிக்கணக்கை நீண்ட காலத்துக்கு முடக்குவது சட்டப்பூர்வ உரிமையை பாதிக்கிறது என மனுதாரர் தெரிவித்தார். கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.1.01 கோடி யாருக்கு சொந்தமானது என்பது விசாரணைக்கு பின் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.