×

எனது ஆட்டம் அணியை சிறந்த நிலைக்கு கொண்டு வந்ததில் மகிழ்ச்சி: ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டி

பெங்களூரு: இந்தியா-இலங்கை அணிகள் இடையே 2வது டெஸ்ட் பகலிரவு போட்டியாக பெங்களூருவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 252 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன் எடுத்திருந்தது. நேற்று 92 ரன் அடித்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த பேட்டி: நான் பேட்டிங்கில் மிடில் ஸ்டம்பில் நின்று விக்கெட்டை பாதுகாத்துக்கொண்டிருந்தேன். இதன் மூலம் சுழலை மறைக்க முடியும் மற்றும் மிட்விக்கெட் பகுதியில் சிங்கிள் எடுக்க முடியும். அதைச் செய்யும்போது நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் இறங்கும்போது நேர்மறையான எண்ணம் இருக்கவேண்டும். பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை. எனவே ஒவ்வொரு பந்தையும் அதன் தகுதிக்கு ஏற்ப விளையாடி ரன்களை எடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது.

சதத்தை தவறவிட்டதில் நான் ஏமாற்றமடைந்தேன். ஆனால் அணியின் கண்ணோட்டத்தில் பார்த்தால், நாங்கள் மிகவும் பாதுகாப்பான ஸ்கோரை எட்டினோம். குறிப்பாக இந்த பிட்சில் 250 ரன்கள் எடுத்தோம். இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் 80களை அடையும் வரை 100ஐப் பற்றி நினைக்கவில்லை. நான் களத்தில் அணிக்காக விளையாடுகிறேன். எனக்காக விளையாடவில்லை. எனது ஆட்டம் அணியை சிறந்த நிலைக்கு கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. சாம்பியன்ஷிப் பார்வையில், வீரர்கள் வெளிப்படையாக ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற விரும்புகிறார்கள். இதுபோன்ற சவாலான பிட்சில் திறமையாக ஆடாவிட்டால் அதை அடைவது கடினம். இவ்வாறு கூறினார்.

Tags : Sreyas Iyer , Glad my game brought the team to a better position: Interview with Sreyas Iyer
× RELATED வாஷியின் கடைசி ஓவரில் ரஸ்சல் பேட்...