×

ஆம்பூர் அருகே நாகப்பாம்பை கையால் பிடித்த பெண்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே வீட்டருகே திரிந்த நாகப்பாம்பை பெண் ஒருவர் கையால் பிடித்து டப்பாவில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் அருகே  குமாரமங்கலம் ஊராட்சியில் புதுமனை 2வது தெருவில் வசித்து வருபவர் கற்பகம். இவரது வீட்டருகே 5 அடி நீள நாகப்பாம்பு ஒன்று நேற்று சுற்றி திரிந்தது. இதைக் கண்ட கற்பகத்தின் தங்கை சுமதி அந்த 5 அடி நீள நாகப்பாம்பை துரத்தி கையால் பிடித்தார். பின்னர் பிடிபட்ட நாகப்பாம்பை  ஒரு டப்பாவில் போட்டு மூடினார்.

பின்னர் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் வந்த வனத்துறையினர் பாம்பை மீட்டு அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.வெறுங்கையால் வீட்டருகே சுற்றித்திரிந்த நாகபாம்பை பெண் ஒருவர் தனது கையால் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.





Tags : Ambur , A woman holding a cobra by the hand near Ambur
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...