×

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

*டிஆர்ஓ மலர்வளையம் வைத்து அஞ்சலி

ஆம்பூர் : ஆம்பூர் அடுத்த வீரகோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரின் உடலுக்கு டிஆர்ஓ மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.வேலூர் மாவட்டம், கண்ணமங்கலம் அஞ்சுதர் தெருவை சேர்ந்தவர் தியாகு(36). இவரது மனைவி மஞ்சுளா(34). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பைக்கில் பெங்களூருவில் இருந்து கண்ணமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரவர் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது எதிர் திசையில் வந்த ஒரு பைக் இவர்கள் மீது மோதியது. இதில் தம்பதி உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மூவரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் எதிர் திசையில் பைக்கில் வந்த ஆம்பூர் கஸ்பா பி மெயின்ரோட்டை சேர்ந்த மஞ்சுநாதன் மகன் நரேந்திரன்(28) என்பவர் தீவிர சிகிச்சை பலனின்றி மூளை சாவு அடைந்தார்.இந்நிலையில் மூளைசாவு அடைந்த நரேந்திரன் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.

பிறகு அதற்கான சிறப்பு மருத்துவர்கள் மூலம் கல்லீரல், இரு சிறுநீரகங்கள், கண்கள் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்த பணியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாப்பாத்தி தலைமையில் கண்காணிப்பாளர் ரதி திலகம், ஆர்எம்ஓ இன்பராஜ், ஏஆர்எம்ஓ கீதா, துணை முதல்வர் கவுரி வெலிகண்ட்லா மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, மயக்கவியல், பொது மருத்துவத்துறை ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

கல்லீரல், சிறுநீரகம் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும், கருவிழி மற்றொரு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கினர். தொடர்ந்து நரேந்திரன் உடலுக்கு கல்லூரி முதல்வர் உட்பட அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3வது உறுப்பு தானம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மூளைச்சாவடைந்த நரேந்தரின் உடலுக்கு திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மலர்வளையம் வைத்து நேற்று அஞ்சலி செலுத்தினார். இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : Ambur ,TRO ,Anjali Ampur ,National Highway ,Veerakoil ,Ampur ,Anjudhar ,Vellore district ,Dinakaran ,
× RELATED தொல்லியல் துறை அலுவலர் மீது நடவடிக்கை கோரி மனு வேலூர் கோட்டை