சென்னை: தமிழகத்தில் வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்கப்படும் என ஐகோர்ட் தெரிவித்தது. தமிழக, கேரள மாநில காவல், வனத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிறப்பு புலனாய்வு பிரிவில் இடம்பெறக்கூடிய தமிழக, கேரள அதிகாரிகளின் பெயர்களை தெரிவிக்கவும் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.