சென்னை: 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு வாபஸ் பெறப்பட்டது. மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதித்து தள்ளுபடி செய்தது. நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக கடந்த நவம்பரில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.