×

6-12 வயது வரை சிறுமிக்கு தொல்லை பலாத்கார ‘பெருசு’க்கு 27 ஆண்டு கடுங்காவல்

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம், திருவனந்தபுரம் அருகே விதுரா ஆனப்பாறை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் காணி (55). பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் ஒருவரின் மகளை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டுக்கு வரவழைத்து பலாத்காரம்  செய்து வந்து உள்ளார். 6 வயது முதல் சிறுமியை கொடுமைப்படுத்த தொடங்கிய  பிரபாகரன், கடந்த 2019ம் ஆண்டு வரை 7 வருடங்கள் பலாத்காரம் செய்து  வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு  தனது பள்ளி ஆசிரியையிடம் பிரபாகரன் தன்னை  பலாத்காரம் செய்து வருவது குறித்து சிறுமி கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த  ஆசிரியை, விதுரா போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசாரின் விசாரணையில்,  சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து,  பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு நெடுமங்காடு  விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பில்குல்,  பிரபாகரன் காணிக்கு 27 வருடம் கடுங்காவல் சிறையும், ₹ 65 ஆயிரம் அபராதமும்  விதித்து உத்தரவிட்டார்.


Tags : Perusu , Harassment of little girls up to 6-12 years To the rapist ‘Peruvian’ 27 years of hardship
× RELATED மேற்குவங்கத்தில் ஒபிசி சான்றிதழ்கள்...