×

கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் காதி கிராப்ட் அலுவலர் மயங்கி விழுந்து சாவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அப்பாராவ் தெருவைச் சேர்ந்தவர் சையத்நசுருதீன் (57). காஞ்சிபுரம் மாவட்ட காதி கிராப்ட் நிறுவனத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மாலிகா. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கலெக்டர் ஆர்த்தி தலைமையில், நேற்று 7 மணியளவில் கூட்டம் நடந்தது.  அதில், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது சையத்நசுருதீன் (57) திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு தண்ணீர் கொடுத்து எழுப்பியபோது, நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே, அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டனர். இதற்கிடையில், ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவருக்கு, முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனாலும் சையத்நசுருதீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். புகாரின்படி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Tags : Khadi Kraft , Khadi Kraft officer fainted and died at a meeting chaired by the Collector
× RELATED கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில்...