சென்னை: மன்னார்குடி மருத்தவர் அசோக்குமார் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். 40 ஆண்டுகளுக்கு மேல் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்த அசோக்குமார் ஏழை எளியவர்களின் பாதுகாவலர் என கூறினார். நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச மருத்துவ சேவை அளித்து மனித நேயத்தின் மறுஉறுவமாக அசோக்குமார் திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டினார்.