×

5காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது: குடியரசு தினத்தன்று முதல்வர் வழங்குவார்

சென்னை: கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருதை குடியரசு தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:  சென்னை வடக்கு மத்திய புலனாய்வு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி, வேலூர் மண்டல மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் குமார், உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சக்தி, முசிறி காவல் உதவி ஆய்வாளர் சிதம்பரம்,  சுங்குவார்சத்திரம் காவல் நிலைய அயல் பணி மத்திய புலனாய்வு பிரிவு தலைமை காவலர் அசோக் பிரபாகரன் ஆகியோருக்கு கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படுகிறது.  இவ்விருது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் 2022ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40 ஆயிரம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Gandhians ,Republic Day , Police, Officer, Gandhiji Police Award, Republic Day,
× RELATED சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்!!