×

கொரோனா தொற்றுக்கு பாஜ சென்னை மாவட்ட செயலாளர் பலி: தகவல் தெரிவிக்காமல் மனைவிக்கு சிகிச்சை

சென்னை:  சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜய்ஆனந்த் (48). இவரது மனைவி செண்பகவல்லி. விஜய் ஆனந்த் உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவர், பாரதிய ஜனதா கட்சியில் வடசென்னை மேற்கு மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர். இவருக்கு, கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் இருந்துள்ளது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்ததில் இவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது மனைவிக்கும் தொற்று உறுதியாகி அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி விஜய்ஆனந்த் இறந்தார். கணவர் இறந்த தகவல் கூட தெரியாமல் அதே மருத்துவமனை 3வது மாடியில் அவரது மனைவி சிகிச்சை பெற்று வருகிறார். மகள் மற்றும் மகன் ஆகிய இருவரும் தந்தையை பலி கொடுத்ததுடன் தாயும் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவருவதால்  இருவரும் செய்வதறியாது கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது….

The post கொரோனா தொற்றுக்கு பாஜ சென்னை மாவட்ட செயலாளர் பலி: தகவல் தெரிவிக்காமல் மனைவிக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : BJP Chennai District ,Chennai ,Vijayanand ,Kolathur ,Senbhagavalli ,Vijay Anand High Court ,BJP ,district ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்