×

பரப்பன அக்ரஹார சிறை அதிகாரி வீட்டில் சோதனை

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை முன்னாள் அதிகாரி கிருஷ்ணகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி இருந்தபோது அதிகாரியாக இருந்தவர் கிருஷ்ணகுமார். பல லட்சம் பணம் வாங்கிக்கொண்டு சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்ததாக சிறைத்துறை அதிகாரிகள் மீது புகார்  எழுந்தது. டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா, அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாராயணா மீது புகார் கூறியிருந்தார். சசிகலாவுக்கு சலுகை காட்டியதற்காக பல லட்சம் பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார் ரூபா.

Tags : Parbhani ,Agrahara , parappana Agrahara Prison
× RELATED குண்டாசில் இருவர் கைது