×

சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் வழக்கில் 2 அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு ஆணை..!!

சென்னை: சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் வழக்கில் 2 அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. வழக்கை நடத்துவதற்கு அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர்களாக வைத்தியநாதன், கலா ஆகியோரை நியமித்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீது வழக்குபதியப்பட்டது. வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.


Tags : TN Government , Special DGP, Sex, Public Prosecutor, Government of Tamil Nadu
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது