×

கணவனை சரமாரி வெட்டி கொன்ற காதல் மனைவி: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

சென்னை: காஞ்சிபுரம் மளிகைசெட்டி தெருவை சேர்ந்தவர் நவ்ஷத் (40). ஆட்டோ டிரைவர். கடந்த 2008ம் ஆண்டு சித்தேரி மேடு பகுதியை சேர்ந்த ரேவதியை (35), காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ரேவதி, இஸ்லாமிய மதத்துக்கு மாறி, தனது பெயரை ரஷிதா என மாற்றி கொண்டார். இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நவ்ஷத் தினமும் வேலை முடிந்து வீடு திரும்பும் போது, மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் நவ்ஷத், போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதுடன், வீட்டில் இருந்த மரம் வெட்டும் கத்தியால் ரஷிதாவை வெட்ட முயன்றார்.

அப்போது, வாசல்படியில் கால் தடுக்கி, நிலைதடுமாறி கீழே விழுந்தார். கையில் இருந்த கத்தியும் கீழே விழுந்தது. கணவனின் கொடுமையை தாங்க முடியாத ரஷிதா, திடீரென அந்த கத்தியை எடுத்து, நவ்ஷத்தை சரமாரியாக வெட்டினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும் வழக்குப்பதிவு செய்து ரஷிதாவை கைது செய்தனர்.

Tags : Kanchipuram , Husband, cut murder, love wife, excitement
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...