மும்பை: டெல்லியில் இருந்து கோவாவுக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை 4 மணியளவில் இது, மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மிக நீளமான சுரங்கப்பாதை என்று வர்ணிக்கப்படும் கர்புட் சுரங்கப்பாதையில் சென்றது.
அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டது. இதனால், தூக்கத்தில் இருந்த பயணிகள் பீதியில் அலறினர். ‘ரயில் பாதையில் பாறை கல் உருண்டு கிடந்ததே விபத்துக்குக் காரணம். இதில், பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை,’ என்று கொங்கன் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.